இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த காதலன்.. காவல் நிலையத்தில் கண்ணீர் விடும் பெண்மணி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடாவை சார்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகனின் பெயர் முரளிதரன் (வயது 27). முரளிதரன் புதுச்சேரி அருகேயுள்ள மருத்துவக்கல்லூரியில் விடுதி காவலாளியாக பணியாற்றி வருகிறான். 

இவனுக்கும் - விழுப்புரம் பகுதியை சார்ந்த 26 வயது பெண்மணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில், காதல் ஜோடிகள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நேரத்தில், முரளிதரன் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன் பின்னர் பெண் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் தவித்து வந்துள்ளான். 

மேலும், பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்து வந்த நிலையில், கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான பெண்மணி நேரில் சென்று எடுத்துரைத்து, முரளிதரன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளான். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முரளிதரனை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore girl sexual abuse by drama lover


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->