விருத்தாசலம் மனைவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! கணவனின் குடும்பத்தாரே நிகழ்த்திய கோரம்., அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் இருக்கும் க.இளமங்கலத்தை சார்ந்தவர் தங்கவேல். இவரது மகனின் பெயர் பார்த்தீபன் (வயது 27). விருத்தாசலத்தில் உள்ள புதுக்கூரைப்பேட்டையை சார்ந்தவர் சிவப்ரியா (வயது 26)., இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு., கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 31 ம் தேதியன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

இந்த சூழ்நிலையில்., இவர்கள் இருவரும் இன்பத்துடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில்., கடந்த மாதத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே சிவப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பார்த்தீபனை கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., பார்த்தீபன் சிவப்ரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதும்., பின்னர் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும் தெரியவந்ததது. 

இந்த கொலைக்கு பார்த்தீபனின் தாயார் கெளரி (வயது 50) மற்றும் சகோதரி பானுமதி., நளினி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட வழக்கில்., குற்றவாளிகளாக உள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore girl killed by her husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->