அண்ணியை கொலை செய்து தூக்கில் தொங்கிய கொழுந்தன்.! விசாரணையில் பகீர்.!!
in cudallore girl killed and man attempt suicide police investigation going on
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள எடச்சித்தூர் கிராமத்தை சார்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவியின் பெயர் சரோஜா. இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்., இவர்களின் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவர்களின் கடைசி மகனான ஆறுமுகம் கேரளாவில் பணியாற்றி வரும் நிலையில்., விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில்., ஆறுமுகத்தின் இரண்டாவது சகோதரரின் மனைவி சிவகாமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில்., ஆறுமுகம் தனது அண்ணனின் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த சிவகாமி அலறியபடி இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்ததை அடுத்து., சிவகாமி சுயநினைவின்றி இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து சிவகாமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்., இந்த செய்தியை அறிந்த ஆறுமுகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore girl killed and man attempt suicide police investigation going on