மதுவினால் தினமும் சண்டை.. திருமணம் முடிந்த 9 மாதம்.. தம்பதியின் சோக முடிவு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி பழைய கச்சேரிசாலை பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி (வயது 22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஒன்பது மாதத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இப்போது மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்து வந்த நிலையில், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மணிகண்டன், பணிக்கு சென்றுவிட்டு மதுவை அருந்தி வீட்டிற்கு வரும் வழக்கத்தை வைத்துள்ளார். 

இதனால் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு வழக்கம் போல இருவரும் சாப்பிட்டு உறங்கியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கண்விழித்த மகேஸ்வரி எழுந்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதன்பின்னர் கண்விழித்து பார்த்த கணவன், மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை சோதனை செய்கையில் அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் மணிகண்டனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டு கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே செல்கையில் விபரீதம் புரிந்துள்ளது. 

இதனையடுத்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cudallore couple Suicide police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->