ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளான., கல்லூரி மாணவிகள் பேருந்து.! கடலூரில் பெரும் சோகம்..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூரில் தனியார் பொறியியல் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அங்குள்ள கருவேப்பிலங்குறிச்சி., பெண்ணாடம் பகுதியை சார்ந்த ஏராளமான பெண்கள் பயின்று வருகின்றனர். 

இவர்கள் அனைவருக்கும் கல்லூரியில் இருந்து பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதன் மூலமாக., தினமும் கல்லூரிக்கு மாணவிகள் பேருந்தில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்., இன்று வழக்கம்போல கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து சென்று கொண்டு இருந்தது.

இந்த நிலையில்., தொழுதூருக்கு அருகே வந்து கொண்டு இருந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இலக்கவே., சாலையோர பள்ளத்தில் சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த மாணவிகள் அனைவரும் அலறி துடித்தனர். 

cudallore college bus accident, கடலூர் கல்லூரி பேருந்து விபத்து,

இந்த விபத்தினை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் பயணித்த மக்கள்., மாணவிகளை மீட்டு அங்குள்ள தொழுதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., இது குறித்து இராமநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாது காயமடைந்த மாணவிகளில்., அங்குள்ள கார்மாங்குடி பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவியான மகாலட்சுமி (வயது 20) என்பவர் எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore college bus accident 25 girl students injured


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->