உயரம் குறைந்த தம்பதியின் வாழ்க்கையில் கைகொடுத்த விதி..! ஆனந்த கண்ணீரில் மிதக்கும் கிராமம்.!!
in cudallore boy and dindigul girl married with height disorder persons
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகனின் பெயர் ஜெயபிரகாஷ். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் பிறந்ததில் இருந்து வளர்ச்சி குறைவாக இருந்த நிலையில்., இவரது மொத்த உயரம் 3.5 அடி. இவரது பெற்றோர் இவருக்காக பல இடங்களில் பெண் தேடி வந்த நிலையில்., இவருக்கு பெண் கிடைக்காமலேயே இருந்துள்ளது.
இந்த சமயத்தில்., திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முத்தனம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் வீர்சாமி என்பவரின் மகள் கலைச்செல்வியும் இவரைப்போன்றே., 3 அடி உயரம் மட்டுமே உடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவல் எப்படியோ ஜெயப்பிரகாசின் குடும்பத்தினருக்கு தெரியவரவே., உடனடியாக திண்டுக்கல்லிற்கு புறப்பட்டு சென்று பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இவர்களின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
நிச்சயிக்கப்பட்ட படி இவர்களின் திருமணம் நேற்று வெகு விமர்சையாக நாடடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரையும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி மனதுடன் வாழ்த்தி சென்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore boy and dindigul girl married with height disorder persons