மரத்தில் பிணமாக தொங்கிய மூன்று இளைஞர்கள்.! நேரில் சென்று பார்த்த காவல் துறையினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!
IN COIMBATORE THREE MEN DIED AND ATTEMPT SUICIDE IN TREE
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள க.க.சாவடி பகுதிக்கு அருகில் உள்ள முட்புதர் பகுதியில்., அடையாளம் தெரியாத ஆண் நபர்கள் மூவரின் சடலமானது தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளது. இதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அப்பகுதி வாசிகள்., இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., தூக்கில் சடலமாக தொங்கியவர்களின் பிரேதத்தை மீட்டு., பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., தீவிர விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில் முதற்கட்டமாக., இறந்தவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பதும்., இறந்த மூவரின் ஒருவரின் ஆடையில் இருந்து கைப்பற்றப்பட்ட விபரங்களை வைத்து., இறந்தவர்களின் ஒருவர் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பாரா மாவட்டத்தை சார்ந்த ஸ்வீரன் மார்க்ஸ் என்பதும் தெரியவந்தது.
தூக்கில் பிணமாக தொங்கிய அனைவரின் உடலிலும் காயங்கள் இருப்பதை அடுத்து., அவர்கள் அனைவரும் அடித்து கொலை செய்த பின்னர் தூக்கில் பிணமாக தொங்க விடப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்த தீவிர விசாரணையில்., காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
IN COIMBATORE THREE MEN DIED AND ATTEMPT SUICIDE IN TREE