அதிநவீன கருவி.. பணக்கார வெறி.. கோவா பிளான்.. பரமேஷின் பகீர் வாக்குமூலம்.!!
in coimbatore thief arrest police investigation going on
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை அடுத்துள்ள பாப்பம்பட்டியில் வசித்து வருபவரின் பெயர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமாக ஆம்னி கார் இருக்கும் நிலையில்., ஆம்னி காரை தனது வீட்டிற்க்கு அருகில் நிற்க வைத்துள்ளார். இந்த சமயத்தில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இவரது கார் வீட்டின் வாயிலில் இல்லாததை அடுத்து., கார் திருடப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., வாகன தணிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில்., காரில் வந்திருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகம் கொண்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பான விசாரணையில்., சென்னையில் உள்ள வியாசர்பாடியில் வசித்து வரும் பரமேஸ்வரன் என்பதும்., இவர் பெரிய கார் திருடன் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும்., இவர்தான் அண்ணாமலையுடைய ஆம்னி காரினை திருடியதும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது இவன் மீது கேரளா., ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாகவும்., சொகுசு காரினை திருடிய வழக்கில் ஏற்கனவே பெங்களூர் காவல்துறையினரால் கைதும் செய்யப்பட்டுள்ளான். இதனையடுத்து பரமேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில்., பரமேஸ்வரனின் சொந்த ஊர் மதுரை என்பதும்., சென்னையில் கார் மெக்கானிக்காக பணி செய்து வந்த நிலையில் தமிழ்நாடு., ஆந்திரா., கேரளா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் கார் கொள்ளையில் ஈடுபட்டதும்., கொள்ளை காரில் கோவா வரை சென்று பின்னர் அங்கிருந்து காரை கொள்ளையடித்து திரும்பி வந்ததும் தெரியவந்தது.
மேலும்., கார்களை திருடுவதற்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் அதிநவீன கருவியை வைத்திருந்ததும்., பெங்களூரில் 118 கார்களை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நேரத்தில் அதிநவீன கருவியும் பறிமுதல் செய்யப்பட்டதும்., தற்போது ஜாமினில் வெளிவந்த கொள்ளையன் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆவலில் கொள்ளையடிக்க களமிறங்கியதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore thief arrest police investigation going on