சொந்த நாட்டில் தொழிலதிபர்.. நிம்மதியை தேடி பிச்சையெடுக்கும் நெகிழ்ச்சி..!!  - Seithipunal
Seithipunal


சுவீடன் நாட்டினை சார்ந்த தொழிலதிபர் கிம். கிம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுவீடனில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதன்பின்னர், கோயம்புத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்துள்ளார். 

இங்கு சிறிதுகாலம் சேவை செய்து வந்த நிலையில், அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியேறிய கிம், இரயில் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து கோயம்புத்தூர் மக்கள் அதிகளவு வரும் பகுதிகளுக்கு சென்று பிச்சையெடுத்து வந்துள்ளார். 

இது தொடர்பாக கிம்மிடம் விசாரித்த நேரத்தில், " எனது தாய் நாடான சுவீடன் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவியை செய்து வந்தேன். இது எனக்கு மன நிம்மதியை கொடுக்கவில்லை. இதனால் ஈஷா யோகா மையத்திற்கு வந்தேன். 

இங்குள்ள ஏழை எளிய மக்களை போல சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணி, இதற்க்காக மக்களிடம் இருந்து பிச்சையெடுத்து எனது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறேன். இதனால் எனக்கு மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கிறது. 

எனது ஆன்மீக குருவின் அறிவுரைப்படி, பிச்சையெடுத்தல் மனநிம்மதியை ஏற்படுத்தும், மன அழுத்தம் குறிக்கும் என்று கூறியதை போல எனக்கு அமைதியும் கிடைக்கிறது. மக்களிடம் இருந்து கிடைக்கும் ரூ.5 மற்றும் ரூ.10 மூலமாக உணவுகளை வாங்கி சாப்பிட்டு, காசு கொடுக்கும் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றியையும் தெரிவித்து வருகிறேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore Sweden business beg to want heart peace


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->