தமிழகத்தை உலுக்கிய கோவை கொலை., பாலியல் வன்கொடுமை வழக்கு..! தீர்ப்பை அறிவித்த உச்சநீதிமன்றம்.!!
in Coimbatore sexual harassment case high court order death warrant
கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த தனியார் பள்ளியில் பயின்று வந்த சிறுமி முஸ்கான். இவரது சகோதரரின் பெயர் ரித்திக். இவர்கள் இருவரும் கடந்த 2010 அம்மன் வருடத்தின் போது., வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவனால் கடத்தப்பட்டு., கொலை செய்யப்பட்டனர். இவர்களின் உடலை அங்குள்ள பொள்ளாச்சி பகுதியருகே கண்டெடுத்தனர்.
இவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சமயத்தில்., சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் அவனது நண்பன் மனோகரன் என்பவனும் கைது செய்யப்பட்டனர்.
மேலும்., அக்கா - தம்பி இருவரும் அவர்களுக்கு தெரிந்த கார் ஓட்டுநர் மூலமாகவே கடத்தப்பட்டு., பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு., கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில்., விசாரணைக்கு அழைத்து செல்லும் போது., மோகன்ராஜ் தப்பியோட முயற்சிதை அடுத்து காவல் துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோகரனிற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்., மனோகரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த தருணத்தில்., தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய கூறி மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மரண தண்டனையை தள்ளிவைத்து தீர்ப்பளித்து இருந்தது.
இந்த நிலையில்., இது தொடர்பான விசாரணையானது மீண்டும் நீதிபதியின் விசாரணைக்கு கீழ் இன்று வந்ததை அடுத்து., இதனை விசாரித்த நீதிபதி காம கொடூரன் மனோகரனிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும்., மனோகரனின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து அறிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Coimbatore sexual harassment case high court order death warrant