கர்ப்பிணி பெண்ணின் தலை துண்டாகி பெரும் சோக மரணம்... கோவையில் பரிதாபம்.!!
In Coimbatore pregnant girl died in accident
மர அறுக்கும் இயந்திரத்தில் கர்ப்பிணி பெண்ணின் தலை சிக்கி, துண்டாகி விழுந்து பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் மர இளைப்பகம் உள்ளது. இந்த மர இளைப்பகத்தை தர்மராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.
தர்மராஜின் மனைவியான கல்பனாவும் இளைப்பகத்தில் தேவையான சிறுசிறு உதவியை செய்து வந்த நிலையில், தற்போது கல்பனா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இன்று வழக்கம்போல கணவருக்கு உதவி செய்யும் பொருட்டு மரத்தை அறுக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளார்.
இதில் இயந்திரத்தில் கல்பனாவின் துப்பட்டா சிக்கிக்கொள்ளவே, இயந்திரத்தின் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் துப்பட்டா முறிந்து தலை துண்டாகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கல்பனா உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In Coimbatore pregnant girl died in accident