குடிம்பிப்பிடி சண்டையில் ஆசிட்டை தூக்கி அடித்த 80 வயது மூதாட்டி... வேடிக்கை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்.. கோவையில் பரிபதாபம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கயம்பாளையம் பகுதியை சார்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவியின் பெயர் ராமாத்தாள் (வயது 80). இவர் ஈயம் பூசும் தொழிலை செய்து வருகிறார். 

பாலுசாமியுடைய தங்கை சகுந்தலாவிற்கும் (வயது 55), இராமத்தாளிற்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கியுள்ளனர்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இவர்களை விலக்கிவிட முயற்சி செய்தும் பலனில்லாது தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடுமையான ஆத்திரம் கொண்ட ராமாத்தாள் வீட்டில் ஈயம் பூச வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து சகுந்தலாவின் முகத்தில் வீசியுள்ளார். 

இதில் சகுந்தலா மற்றும் அவருக்கு அருகில் நின்று சக்திவேல் (வயது 28) என்ற வாலிபரின் மீது ஆசிட் பட்டு பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

இவர்களுக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமாத்தாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore old lady arrest by police due to acid through


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->