திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி... கோவையில் பேரதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகேயுள்ள கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெண்ணாண்டம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவியின் பெயர் ரஞ்சனி. இவர்கள் இருவருக்கும் கேசவராஜ் (வயது 22) என்ற மகன் உள்ள நிலையில்., கேசவராஜ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவருடைய மனைவியின் பெயர் கீர்த்திகா (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., நேற்று காலை நேரத்தில் இருவரும் சுமார் 11 மணிவரை வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். 

died, suicide attempt, killed, murder,

இந்த சமயத்தில்., வீட்டின் உள்ளே சென்ற அனைவருக்கும் அதிர்ச்சியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்., இருவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்கள் இருவரின் உடலை கட்டியணைத்து கதறியழுதனர்.

இதனைத்தொடர்ந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு வந்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில்., இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore new married couple attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->