கோவை பூட்டிய வீட்டில் இருந்த சடலம் வழக்கில் பகீர் திருப்பம்..! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in coimbatore murder case culprit arrest by police
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் அருகேயுள்ள கல்லுழியை சார்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக அழகுமணி என்ற விதவை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும்., அழகுமணிக்கு முதல் கணவரின் மூலமாக மகளொருவர் இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சக்திவேல் பணியாற்றி வரும் நிலையில்., கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக பணியில் இருந்து ஓய்வு பெற்று கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். இந்த சமயத்தில் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக அழகுமணி பிரிந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து சக்திவேல் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில்., உறவினர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால்., திருநெல்வேலியில் உள்ள தனது சகோதரியுடன் மட்டும் அவ்வப்போது அலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தனது சகோதரியுடன் சக்திவேல் பேசாமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சக்திவேலின் சகோதரி., தினேஷை கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்த நிலையில்., தனதுமாணவின் இல்லத்திற்கு சென்ற நேரத்தில் வீட்டின் வாயில் திறந்தே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த தினேஷ் வீட்டின் உள்ளே சென்ற சமயத்தில் தனது மாமா உடலில் தீயெரிந்து எலும்பு கூடாக இருக்கும் காட்சியினை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சக்திவேலின் உடலை கைப்பற்றி., இவர் இறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். மேலும்., இவரின் உடலை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில்., முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சனையால் இக்கொலை அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில்., தற்போது உண்மையான தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் வசித்து வரும் வீட்டின் எதிர்வீட்டில் இருந்த ஆனந்த குமார் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும்., சக்திவேலின் வீட்டிற்கு அருகேயிருந்த மரத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆனந்தகுமார் வெட்டியுள்ளதை அடுத்து., இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதன் பின்னர் அவ்வப்போது இருவருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில்., சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் மது போதையில் ஆனந்தகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை மண்ணெண்ணையை ஊற்றி எரித்துவிட்டு பணம் மற்றும் நகைக்காக அரங்கேறிய கொலை போன்று சித்தரித்துவிட்டு காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்று கூறி அங்கேயே சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இந்த விசாரணையில்., ஆனந்தகுமார்., வைத்தியலிங்கம்., சரவணன் மற்றும் சின்னத்துரை ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore murder case culprit arrest by police