கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளகாதலியின் மகனுக்கு நேர்ந்த சோகம்.! இரத்த வெள்ளத்தில் நடுவீதியில் துடிதுடித்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியை சார்ந்தவர் கிரி பிரசாத். இவரது மனைவியின் பெயர் பத்ம பிரியா (வயது 43). இவர்கள் இருவருக்கும் மோகன் பிரபு என்ற 20 வயதுடைய மகனும்., அஜித் என்ற 15 வயதுடைய மகனும் உள்ளனர். அஜித் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்த நிலையில்., கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து., இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில்., பத்மப்ரியா மட்டும் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நேரத்தில்., கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக அங்குள்ள அண்ணாநகர் பகுதியை சார்ந்த அய்யாசாமி (வயது 37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அய்யாசாமி எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் நிலையில்., இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் மகன்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் மகன்களுக்கு தெரியவரவே., கள்ளக்காதலை கைவிட கூறி வற்புறுத்தி வந்துள்ளனர். 

மகன்களின் பேச்சிற்கு ஏற்ப கள்ளகாதலனிடம் இருந்து விலக்கம் அடைய துவங்கிய நிலையில்., மோகத்தின் பிடியில் இருந்த அய்யாசாமி தொடர்ந்து தாம்பத்தியத்திற்கு வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில்., நேற்று பத்மப்ரியாவின் இரண்டாவது மகன் அங்குள்ள பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில்., சிறுவனை கண்ட அய்யாசாமி உன்னை உனது தாயார் அழைத்து வர கூறி கூறியுள்ளதாக கூறியுள்ளார். 

இதனை கேட்ட அஜித் அவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லவே., அங்குள்ள மேம்பால பகுதிக்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தின் கழுத்தை அறுக்க முயற்சித்துள்ளார். கழுத்தில் கத்தி குத்து பட்ட நிலையில்., அலறித்துடித்த அஜித்தின் அலறலை கண்ட அக்கம் பக்கத்தினர்., உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய அய்யாசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore man try to kill her illegal affair girl son due to problem of enjoy with her


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->