கணவனை பட்டப்பகலில் அடித்து நொறுக்கிய மனைவிகள்..! வெளியான கண்ணீர் கதறல்கள்..!! கோவையில்  பரபரப்பு..!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகேயுள்ள நேரு நகர் பகுதியை சார்ந்தவர் சவுந்தர்ராஜ். இவரது மகனின் பெயர் அரங்க அரவிந்த தினேஷ் (வயது 26). இவன் அங்குள்ள ராசிபுரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். இவன் கடந்த 2016 ஆம் வருடத்தில்., திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியை சார்ந்த ராஜசேகர் என்பவரின் மகளான பிரியதர்ஷினியை திருமணம் செய்துள்ளான். 

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் உள்ளாகவே., பிரியதர்ஷினியை அடித்து துன்புறுத்தியதால்., இதனை தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் தெரிவித்துள்ளார். இருவரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில்., அங்குள்ள பேரூர் காவல் நிலையத்தில் புகார் செய்து., தனது தாயாரின் இல்லத்திற்கு சென்று தாயாருடன் வசித்து வந்தார். 

முதல் மனைவி பிரியதர்ஷினியுடன் கொடூரன் அரவிந்த....

முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில்., திருமணம் முடிந்ததை மறைத்து இணையதள திருமண சேவை மூலமாக மீண்டும் பெண் தேடியுள்ளான். இந்த நிலையில்., திருமண தகவல் மையம் மூலமாக., கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தை சார்ந்த ஐயப்பன் என்பவரின் மகளான அனுப்பிரியா (வயது 23) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளான். 

அனுப்பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு வயதுடைய ஆண் குழந்தை இருந்த நிலையில்., அரவிந்த் - அனுப்பிரியாவை அங்குள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்க வைத்து இருந்துள்ளான். மேலும்., முதல் மனைவியை கொடுமைபடுத்தியது போலவே., இரண்டாவது மனைவியையும் கொடுமைபடுத்தி வந்துள்ளான்.  

இரண்டாவது மனைவி அனுப்பிரியாவுடன் கொடூரன் அரவிந்த்...

இதனையடுத்து கடுமையான மன வேதனைக்கு உள்ளான அனுப்பிரியா., கரூரில் இருக்கும் தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இரண்டு மனைவியும் அரவிந்தின் கொடூரத்தால் பிரிந்து சென்ற நிலையில்., மூன்றாவதாக திருமணம் செய்ய திருமண வலைத்தளத்தில் வரன் தேடியுள்ளான். இந்த விஷயத்தை அறிந்து கொண்ட இரண்டு மனைவியின் குடும்பத்தாரும் அரவிந்திடம் இது குறித்து கேட்டுள்ளனர். 

இதனை கேட்ட அரவிந்த் "நான் அப்படித்தான் செய்வேன்., உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்து பாருங்கள்" என்று கூறியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு மனைவிகளும் அரவிந்த் பணியாற்றும் தொழிற்சாலைக்கு சென்று வெளியே அனுப்பும் படி கேட்ட சமயத்தில்., தனியார் ஆலை நிர்வாகம் சார்பில் அரவிந்தை வெளியே அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து இருவரும் நிறுவனத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட துவங்கியதை அடுத்து., காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., அரவிந்த் மற்றும் பிரியதர்சினி - அனுப்பிரியா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வர சொல்லி கூறியுள்ளனர். காவல் நிலையத்திற்கு செல்ல அரவிந்த் நிறுவனத்தில் இருந்து வெளியே வரவே., அரவிந்தை பிரியதர்சினி மற்றும் அனுப்பிரியா அடித்து நொறுக்கினர். 

police, police light, police siren,

இவர்களுக்கு உதவியாக இருவரின் குடும்பத்தாரும் சேர்ந்ததால்., சம்பவ இடத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் மூவரையும் விலக்கி விட்டு., காவல் நிலையத்திற்கு அளித்து சென்றனர். காவல் நிலையத்திற்கு சென்ற இரண்டு மனைவிகளும்., தங்களுக்கு நடந்த அநீதியை கூறி கதறியழுதுள்ளனர்.. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore man missuses and married two girl police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->