15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி.! விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.!!
in coimbatore man killed 15 dogs
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொங்கணகிரி இரண்டாம் பகுதியை சார்ந்தவர் கோபால். இவர் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் நீர்நிலைகளில் மீன்களை பிடித்து அப்பகுதி மக்கள் மற்றும் மீன் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இவர் தினமும் பணியை முடித்து விட்டு இரவு நேரங்களில் வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த வகையில்., இவர் இரவு நேரங்களில் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது., சாலையில் இருக்கும் நாய்கள் இவரை தினமும் தொடர்ந்து பார்த்து குரைத்து வந்துள்ளது.
ஒரு சமயத்துக்கு மேல் ஆத்திரம் அடைந்த இவர்., 15க்கும் மேற்பட்ட அந்த வீதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவரின் புகாரை ஏற்ற காவல்துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில் திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார். சம்பவத்தன்று கடந்த 13 ஆம் தேதி மீன்பிடித்து., அங்குள்ள வீடுகளுக்கு மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்து நள்ளிரவில் வீடு திரும்பிய நேரத்தில் முன்னதாக திட்டமிடப்பட்டதன் படி., எஞ்சிய மீன்களில் விஷத்தை கலந்து., அந்த இறைச்சியை நாய்களுக்கு வழங்கியுள்ளார்.
இதனை சாப்பிட நாய்கள் மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தன. இதற்கு ஆதாரமாக அங்குள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களில்., இவர் நாய்களுக்கு விஷம் கலந்த மீன்களை போடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அவரிடம் காரணம் கேட்ட சமயத்தில்., நாய்கள் தொடர்ந்து குரைத்து வந்ததால் ஆத்திரமடைந்து இந்த கொடூர செயலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இது தொடர்பான விசாரணையில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக ஒரு தெருவில் நாய் இருந்தால்., அந்த தெருவில் திருடன் வரமுடியாது என்று கூறுவார்கள். அந்த பகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் பகல் நேரங்களில் வந்தாலும்., அந்த தெருவில் நடமாடும் நாய்கள் குரைத்து நமக்கு புதிய ஆட்களின் நடமாட்டத்தை தெரிவித்துவிடும். தனி மனிதனின் சுய நலத்திற்காக இவ்வாறு தெருவில் உள்ள நாய்களை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in coimbatore man killed 15 dogs