இரண்டு மாதமாக பேச்சே இல்லை.. வீட்டை திறந்தால்... காத்திருந்த அதிர்ச்சி.! கோவையில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் அருகேயுள்ள கல்லுழியை சார்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக அழகுமணி என்ற விதவை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும்., அழகுமணிக்கு முதல் கணவரின் மூலமாக மகளொருவர் இருக்கிறார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சக்திவேல் பணியாற்றி வரும் நிலையில்., கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக பணியில் இருந்து ஓய்வு பெற்று கோயம்புத்தூருக்கு  வந்துள்ளார். இந்த சமயத்தில் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக அழகுமணி பிரிந்து சென்றுள்ளார். 

illegal affair, couple enjoy, affair, husband wife enjoy,

இதனையடுத்து சக்திவேல் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில்., உறவினர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால்., திருநெல்வேலியில் உள்ள தனது சகோதரியுடன் மட்டும் அவ்வப்போது அலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தனது சகோதரியுடன் சக்திவேல் பேசாமல் இருந்துள்ளார். 

இதனால் சந்தேகம் அடைந்த சக்திவேலின் சகோதரி., தினேஷை கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்த நிலையில்., தனதுமாணவின் இல்லத்திற்கு சென்ற நேரத்தில் வீட்டின் வாயில் திறந்தே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த தினேஷ் வீட்டின் உள்ளே சென்ற சமயத்தில் தனது மாமா உடலில் தீயெரிந்து எலும்பு கூடாக இருக்கும் காட்சியினை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். 

crime, crime images,

இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சக்திவேலின் உடலை கைப்பற்றி., இவர் இறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். மேலும்., இவரின் உடலை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில்., முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் சக்திவேல் வசித்து வந்த வீட்டருகே இருந்த இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும்., இந்த விஷயம் இளம்பெண்ணுடைய கணவருக்கு தெரியவந்ததை அடுத்து., இதனை எச்சரித்துள்ளதாகவும்., இதனை இருவரும் ஏற்காத நிலையில்., இக்கொலை அரங்கேறியிருக்கலாம் என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக இளம்பெண்ணின் கணவர் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore illegal affair murder police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->