மனைவியை பார்க்கக்கூடாத கோலத்தில் இருந்ததை கண்ட கணவன்.! கள்ளக்காதல் ஜோடிகள் எடுத்த விபரீத முடிவால்., பரிதாபமாக பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் ஆணையகாட்டை பகுதியை சார்ந்தவர் மருதாச்சலம். இவரது மகனின் பெயர் மதன் குமார்., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்., இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இந்த நிலையில் அதே பகுதியைச் சார்ந்த சவுந்தரராஜன் என்பவரின் மனைவியின் பெயர் கீர்த்தனா, இவர்கள் இருவருக்கும் முதலில் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது., இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த தகவலானது சவுந்தரராஜனுக்கு தெரியவரவே., இதுகுறித்து மனைவியை எச்சரித்துள்ளார். மேலும் நமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்., இதனால் இந்த பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். 

இதனை ஏற்காத கீர்த்தனா கணவர் சொல்வதையும் கண்டுகொள்ளாது., மதன்குமாரை தொடர்ந்து சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதன் காரணமாக சௌந்தர்ராஜன் தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசி கண்டித்து எச்சரித்துள்ளார் 

இதுகுறித்து கீர்த்தனா தனது கள்ளக்காதலன் மதன்குமாரிடம் தெரிவிக்கவே., இதனைக் கேட்ட இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சந்தோசமாக வாழலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். இவர்களின் திட்டப்படி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்., அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து அங்கு உள்ள இடங்களில் சுற்றித் திரிந்து கையிலிருந்த பணம் அனைத்தையும் செலவழித்து உள்ளனர். 

பணம் அனைத்தும் செலவழித்த நிலையில் காலையில் மீண்டும் கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு வந்து பேருந்து நிலையத்தில் அமர்ந்து செய்வதறியாது பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில்., இனிமேல் வீட்டிற்குச் செல்லும் பட்சத்தில் நம்மை வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இருவரும் முடிவு எடுத்து வாழ வழி இல்லாமல் அங்கு உள்ள சிங்காநல்லூர் மயானத்திற்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். 

இவர்கள் சென்ற நேரத்தில் ஒரு ரயில் வரவே., இதனை கண்ட இவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து,, ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். பின்னர் ரயில் அதிவேகத்தில் வந்த நிலையில் ரயில் முன் சென்ற மதன்குமார் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியான நிலையில்., தலையில் படுகாயமடைந்த நிலையில்., கீர்த்தனா ரயில் மோதியதில் தூக்கி எறியப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார். 

இவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த சமயத்தில் இருவரும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் மீட்ட காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., தற்போது கீர்த்தனா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore illegal affair couple attempt suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->