அரசு பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்.. புகாரை வாபஸ் பெற மிரட்டல்.. கோவையில் பேரதிர்ச்சி.!!
in coimbatore govt school teacher sexual torture for girl students
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சார்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் காட்டாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடம் எடுத்து வரும் நிலையில், பள்ளி நேரத்தில் வகுப்பறையில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி முதல் ஜனவரி மாதம் 30ம் தேதி வரை ஏழாம் வகுப்பில் பயின்று வரும் 12 வயது மாணவிக்கு ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளான்.
இதையடுத்து மாணவி இதுதொடர்பாக தனது வகுப்பு தலைவரிடம் புகார் அளிக்கவே, அதிர்ச்சி விஷயமாக நடராஜன் மூலமாக வகுப்பு தலைவரான மாணவியும் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெண் ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து முறையிடவே, இவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியில் இருந்த புகார் பெட்டியில் இது குறித்த புகாரை எழுதி போட்டுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பாக அவர் விசாரணைக்கு வந்தபோது, மாணவியை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்துள்ளனர். இருப்பினும் நடராஜன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் தந்தை அங்குள்ள துடியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பள்ளிக்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், மாணவிகளுக்கு நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், மாணவிகள் பலமுறை எச்சரித்தும் கொடூரத்தை தொடர்ந்து அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
பின்னர் நடராஜனின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில், ஏழாம் வகுப்பு மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore govt school teacher sexual torture for girl students