சிறுவயது முதல் காதல்.. பச்சை கொடி காட்டிய பெற்றோர்.. பிடிப்பிற்காக காத்திருந்த பெண்ணை கொடூர கொலை செய்த நாடகக்காதலன்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரனத்தம் அருகேயுள்ள கல்லுக்குழி பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மனைவியின் பெயர் ராமத்தாள். இவரது மகளின் பெயர் நந்தினி (வயது 21). இவர் கோயம்புத்தூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி கணிதத்துறையில் இறுதி வருடம் பயின்று வருகிறார். அங்குள்ள சங்கனூர் பகுதியை சார்ந்தவர் தினேஷ் (வயது 21). இவர் அப்பகுதியில் அலங்காரப்பொருட்கள் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். 

தினேஷும் - நந்தினியும் சிறுவயது முதல் ஒன்றாக பயின்று வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் பல வருடமாக காதலித்து வந்த நிலையில், அலைபேசியின் மூலமாகவும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இந்த நேரத்தில், தினேஷ் கடந்த சில மாதமாக திருமணத்திற்கு நந்தினியை வற்புறுத்தி வந்துள்ளார். 

இதனையடுத்து இது தொடர்பாக நந்தினியும் தனது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, இரண்டு வீட்டாரும் பேசி முடித்துவிட்டு நந்தினியின் படிப்பு நிறைவு பெற்றவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இவர்களின் காதலிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதன்பின்னர் நந்தினி வழக்கம்போல தனது படிப்பை மேற்கொள்ள கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த சில தினத்திற்கு முன்னதாக நந்தினியை சந்தித்த தினேஷ் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவே, நந்தினியும் இது தொடர்பாக ஏதும் பேசாமல் இருந்து வந்துள்ளர். மேலும், எனது படிப்பிற்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத தினேஷ் நந்தினியை பார்க்கும் இடமெல்லாம் திருமணம் குறித்த தொல்லை செய்து வந்துள்ளார். 

இதனால் கோபமடைந்த நந்தினி காத்திரு என்று கூறி பேசாமல் இருந்து வந்த நிலையில், தினேஷ் நந்தினியின் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று மத்திய நேரத்தில் நந்தினியை காணுவதற்கு அவரது இல்லத்திற்கு சென்ற தினேஷ், திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நந்தினி கூறவே, ஆத்திரம் தினேஷின் கண்ணை மறைத்துள்ளது.

வீட்டில் இருந்த சேரை எடுத்து நந்தினியின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் தாக்கிய நிலையில், நந்தினி படுகாயமடைந்து அலறித்துடித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கயிற்றால் நந்தினியின் கழுத்தை இறுக்கி, முன்னதாகவே எடுத்து வந்திருந்த சாணி பவுடரை நந்தினியின் வாயில் ஊற்றி தப்பி சென்றுள்ளான். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து நந்தினியின் நிலை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் மகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், இன்று காலை நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தினேஷை கைது செய்யக்கூறி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தினேஷும் சாணிப்பவுடரை குடித்துவிட்டேன் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girl murder by drama lover


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->