கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 30 வயது காமுகன்.. பெண்ணின் தாயை தாக்கிய கொடூரம்.!!
in Coimbatore girl love torture drama love culprit
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவன் விமல் சேகர் (வயது 30). இவன் கோயம்புத்தூரில் உள்ள குறிச்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளான். குறிச்சி பகுதியில் தங்கியிருந்த விமல், மதுரை சிமெண்ட் ஆலையில் உள்ள அவசர ஊர்திக்கு ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளான்.
இந்த நிலையில், விமல் இப்பகுதியை சார்ந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும், கல்லூரி முடித்துவிட்டு வரும் போதும் காதலை தெரிவித்து தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பாக பொறுத்து பார்த்த மாணவி நாளடைவில் விமலின் அட்டூழியம் அதிகரித்ததால் தனது தாயாரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதன்பின்னர், மாணவியின் தாயார் விமலிடம் சென்று இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இந்த நேரத்தில், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தொடர்ந்து அதிகரித்து சென்ற நிலையில், கொடூரன் விமல் மாணவியின் தாயை அடித்துள்ளான். இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விமலை சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Coimbatore girl love torture drama love culprit