ஆசிரியையை கடத்தி பதறவைத்த அண்ணன் - தம்பி.! கோவையில் பகீரென அரங்கேறிய பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியை சார்ந்தவர் சசிகலா (வயது 43). இவர் இருகூர் அரசு மேல்நிலைபள்ளியில் ஓவிய ஆசியையாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது பள்ளிப்பருவ நண்பராக பல்லடத்தை சார்ந்த ஆசாத் (வயது 44) என்பவர் இருந்துள்ளார். 

இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பல்லடத்தில் நடைபெற்ற விழாவுக்கு சசிகலா சென்ற நிலையில்., ஆசாத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த நேரத்தில்., சசிகலா தனக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆனதை நண்பரிடம் கூறவே., சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும்., ஆசாத்துக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இருவரும் அலைபேசியில் பேசி வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக ஆசாத்தை தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துள்ளது. இந்த நேரத்தில்., சசிகலாவை தொடர்பு கொண்ட நபரொருவர் தனது பெயர் மதன் என்றும்., ஆசையுடைய நண்பர் என்றும்., ஆசாத்துடன் திருமணம் செய்து வைக்க ரூ.1 இலட்சமும் கேட்டுள்ளார். 

kidnapped, kidnapping,

இதனடிப்படையில்., கடந்த 1 ஆம் தேதியன்று திருப்பூரில் இருக்கும் திருமுருகன் பூண்டி அருகேயுள்ள அவிநாசி சாலையில் சசிகலா காத்துகொண்டு இருக்கவே., காரில் வந்த மதன் சசிகலாவை காரில் ஏற்றி சென்றுள்ளார். காருக்குள் அபுதாகீர்., மணிகண்டன் மற்றும் சசிகுமார் ஆகியோர் இருந்த நிலையில்., ஆசாத் குறித்து சசிகலா கேட்ட சமயத்தில் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

பின்னர் இவரை மிரட்டி அங்குள்ள விடுதியில் தங்க வைத்த நிலையில்., இவருடைய ஏ.டி.எம் கார்டு மூலமாக ரூ.90 ஆயிரத்தை எடுத்துள்ள நிலையில்., இக்கும்பல் சசிகலாவை கொலை செய்ய முயற்சித்துள்ளது. இவர்களின் பிடியில் இருந்து தப்பித்த சசிகலா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து அபுதாகீர் மற்றும் அபுதாகீரின் தம்பி தஸ்தகீர் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore girl kidnapped by school mate friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->