சந்தேக தீயால் தீக்குளித்து பலியான காதலி..! விசாரணையில் பகீர்..! கோவையில் பேரதிர்ச்சி.!!
in coimbatore girl attempt suicide due to lover doubts
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை அடுத்துள்ள நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சார்ந்தவர் சுமதி. இவர் நகராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் ப்ரீத்தி. சுமதியின் கணவர் நான்கு வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில்., சுமதி தனது மகளான ப்ரீத்தியை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., கோயம்புத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் ப்ரீத்தி பயின்று வந்த நிலையில்., அங்கு இருக்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். படிப்போடு நிர்க்கமால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசுடைய தபால் ஊழியர் தேர்வை எழுதி வெற்றி பெற்றதை அடுத்து., அங்குள்ள தாமரைக்குளம் பகுதியில் தபால் ஊழியராகவும் பணியில் சேர்ந்தார்.
இதனையடுத்து கடந்த சுமார் 20 நாட்களாக தனது தாத்தா தங்கையன் என்பவரின் இல்லத்தில் இருந்து பணிக்கு சென்று வந்த நிலையில்., கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக கோயம்புத்தூர் கல்லூரிக்கு சென்று தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கு பின்னர் கடந்த திங்கள்கிழமையன்று தீக்குளித்து திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
உயிருக்காக போராடி துடித்த இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., இவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலானது காவல் துரையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., ப்ரீத்தி கல்லூரியில் பயின்று வந்த சமயத்தில்., மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்., தபால் ஊழியராக பணியில் சேர்ந்த பின்னர்., வழக்கம் போல இருவராலும் பேச முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும்., கோயம்புத்தூருக்கு வந்த ப்ரீத்தி., அவரின் காதலர் கூறிய இடத்தில் அறையெடுத்து தாங்காமல்., விடுதியில் தங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில்., காதலரும் அவரின் சந்தேக எண்ணத்துடன் பல தீக்கு சமமான வார்த்தைகளை கூறியுள்ளார். இதனால் ப்ரீத்தி தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது ப்ரீத்தியின் தரப்பில் இருந்த பூர்வீக சொத்துக்களை தாயார் விற்பனை செய்ய எடுத்த முடிவானது., ப்ரீத்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால்., யாரும் நம்மை புரிந்து கொள்ள வில்லை என்று தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற சந்தேகமும் உள்ளது. இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore girl attempt suicide due to lover doubts