போலி முகநூல் கொடூரனிடம் சிக்கி தவித்த பெண்கள்.! காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கைது செய்யப்பட்ட ருசிகர சம்பவம்.!!
in Coimbatore Facebook fraud arrest by police misusing girls
கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த இளம்பெண்., பாலிவுட் திரையுலகின் பின்னணி பாடகர் அர்மான் மாலிக் என்ற பெயரில்., பெண்களை ஏமாற்றும் நபர் ஒருவர்., பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் பேச்சுக்களை பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த கொடூரனை பற்றி விசாரணை செய்ய தனிப்படை அமைத்த காவல் துறையினர்., போலி முகநூல் மூலமாகவே கைது செய்ய திட்டமிட்டு., பெண்ணின் பெயரில் முகநூல் ஒன்றை துவக்கி., நட்பு வட்டாரத்தில் பேசி வந்துள்ளனர். மறுமுனையில் இருந்து பேசுவது பெண் என்று எண்ணிய கொடூரன்., தனது கொடூரத்தை முதலில் அமைதியான மற்றும் அன்பான பேச்சுக்களில் துவக்கி., அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டியுள்ளான்.
இந்த நேரத்தில்., இவனது பேச்சுக்களை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியாகியிருந்த வேளையில்., பணத்தை கேட்டு தொடர்பு கொண்டுள்ளான். இதனை ஏற்ற காவல் துறையினர் எந்த விதமான சலனமும் இன்றி., பணம் வழங்குவதாக கூறி கோயம்புத்தூருக்கு வரச்சொல்லி பேசியுள்ளனர். இதனையடுத்து கோயம்புத்தூருக்கு வந்த கொடூரனை காவல் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.
காவல் துறையினர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில்., விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சார்ந்த மகேந்திரவர்மன் என்ற 30 வயதுடைய இளைஞன் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு., வேலையில்லாமல் இருந்த நேரத்தில் துவக்கபட்ட முகநூல் மூலமாக இந்த கொடூர செயலை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
இவனிடம் தற்போது வரை சுமார் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கி., பணத்தை இழந்த நிலையில்., தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. நல்ல வேலையாக காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் கீழ் தற்போது பல பாதிப்பில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பேசுவதை முடிந்தளவு குறைப்பது இது போன்ற தவறுகளில் இருந்து பாதுகாக்கள் வழிவகை செய்யும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
English Summary
in Coimbatore Facebook fraud arrest by police misusing girls