சில்லென்ற காற்றில் தலையில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்... தெறித்தோடிய பொதுமக்கள்.. கோவையில் பேரதிர்ச்சி.!!
in coimbatore electrical line cutted due to nature wind
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் ராஜா மில் சாலையில் மின்கம்பங்கள் சென்று கொண்டு இருக்கிறது. இங்கு இருக்கும் மின்கம்பத்தில் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக லாரி மோதி சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில்., நேற்று மாலை நேரத்தில் சுமார் 5.30 மணியளவில் சாலையில் சென்று கொண்டு இருந்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. இந்த நேரத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவர்கள்., பொதுமக்கள் மற்றும் பெண்கள் சென்றனர்.
மின்கம்பி அடுத்தடுத்து அறுந்து விழுந்ததை இதனை கண்ட பெண்கள்., பொதுமக்கள் என அனைவரும் பதறியடி ஓட்டம் பிடித்தனர். இதனை அறியாது அங்கிருந்த சிலரை அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் சென்று கைப்பற்றினர்.
பின்ன இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மின்வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்., மின்கம்பியை அகற்றி தேவையான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நல்ல வேலையாக அறுந்துவிழுந்த மின்கம்பிகள் அவ்வழியாக சென்ற நபர்களின் மீது விழாமல் இருந்துள்ளது. யாரின் மீதும் எதிர்பாராத விதமாக விழவில்லை என்பதால் பெரும் சோகம் தவிர்க்கப்பட்டது. மழை காலங்களில் மக்கள் சாலைகளில் செல்லும் போது பாதுகாப்பாக செல்வது நல்லது.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore electrical line cutted due to nature wind