சோறு வைத்தவருக்கு ஊறு விளைவிக்க வந்த பாம்பு.. பாய்ந்த 3 நாய்கள்... பஞ்சு பஞ்சாக ஆக்கிப்போட்ட சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால் மண்டபம் அருகே இருக்கும் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். 

இவரது வீட்டின் அருகே ராமலிங்கத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டப் பகுதியில் இருக்கும் தனது மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார்.

இந்த நேரத்தில், இவருடன் பாதுகாப்பதற்காக வளர்க்கப்பட்டு வரும் மூன்று நாய்களும் உடனே சென்றுள்ளது. இந்த நிலையில், அப்பகுதி வழியாக சுமார் 6 அடி நீளமுள்ள விஷ பாம்பு இராமலிங்கத்தை நோக்கி வேகமாக வந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இராமலிங்கம் மற்றும் அவர் நண்பர் இருவரும் பயத்தில் செய்வதறியாது திகைக்கவே, இதனை கண்ட 3 நாய்களும் தனது எஜமானருக்கு ஆபத்து வந்ததை உணர்ந்து பாம்பு நோக்கி சீறிப்பாய்ந்து கடித்து குத்தறியுள்ளது. 

இதனையடுத்து பாம்பு கடித்து குதறி கொன்ற காட்சியை இராமலிங்கத்தின் நண்பர் தனது அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தனது எஜமானருக்கு ஆபத்து என்றதும், நாய்கள் பாம்பை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore dog byte snake when try to byte owner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->