தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு..! தூக்குத்தண்டனையை அறிவித்த நீதிமன்றங்கள்..!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கே கவுடர் வீதியில் இருக்கும் காத்தான் செட்டி பகுதியை சார்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். இவர் ஜவுளிக்கடை அதிபராக இருந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சங்கீதா. இவர்கள் இருவருக்கும் 11 வயதுடைய மகளும்., 8 வயதுடைய மகனும் இருந்தனர். இந்த இரண்டு குழந்தைகளும் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்தனர். 

இவர்கள் இருவரும் தினமும் பள்ளிக்கு கால்டாக்சியில் சென்று வருவது வழக்கமான செயலாகும். இந்த நிலையில்., இவர்கள் இருவரும் கடந்த 2010 ஆம் வருடத்தின் போது அக்டோபர் மாதத்தின் 29 ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்ற சமயத்தில் கடத்தப்பட்டனர். இவர்களை காணாது தேடி அலைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள பிஏவி வாய்க்கால் பகுதியில் இருவரும் பிணமாக கிடந்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil

மருத்துவமனையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள்., சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து., இந்த விஷயம் தமிழகம் முழுவதும் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது கடத்தல். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைவழக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்., கால்டாக்சி ஓட்டுநர் மோகன் ராஜ் மற்றும் மனோகரனை கைது செய்தனர். 

இவர்கள் இருவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர்., மோகன்ராஜை காவல் துறையினர் என்கவுண்டரில் போட்டு தள்ளினர். மனோகரனை மட்டும் கோயம்புத்தூரில் உள்ள சிறையில் அடைத்த நிலையில்., இந்த வழக்கானது கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு கடந்த 2012 ஆம் வருடத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மனோகரனிற்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் மூன்று ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கை எதிர்த்து மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில்., சென்னை உயர்நீதிமன்றமும் காம கொடூரன் மனோகரனிற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்பையும் எதிர்த்து மனோகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில்., இன்று இன்று மீண்டும் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தூக்கு தண்டனை இரத்து செய்ய இயலாது என்று கூறி தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore child sexual harassment and killed case court order death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->