15 வயது சிறுமியை நாடககாதலால் ஏமாற்றி, வாழ்க்கையை சீரழித்த வடமாநில இளைஞன்.. மருத்துவமனையில் அதிர்ந்து போன பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர் பிபீக் தாஸ் (வயது 20). இவன் அங்குள்ள காரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறான். 

இவனுக்கும், இங்கு பணியாற்றி வந்த பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு 15 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமியிடம் பிபீக் தாஸ் பேசி வந்த நிலையில், சிறுமியை நாடககாதலால் காமுகன் வீழ்த்தியுள்ளான்.

இவனது பேச்சில் மயங்கிய சிறுமியும் காதல் வலையில் விழவே, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளான். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமாகவே, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமி தாஸை வற்புறுத்தியுள்ளார். 

இதனையடுத்து பிபீக் தாஸும் யாருக்கும் தெரியாது, சிறுமியை வீட்டில் வைத்தே தாலி கட்டிய நிலையில், சிறுமியின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. இதன் பின்னர் சிறுமியை பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளனர். மருத்துவனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்வவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில் விஷயம் வெளிவந்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த பிபீக் தாஸ் தலைமறைவாகவே, இவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore child sexual abuse police investigate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->