பார்வைக்குறைபாடு உள்ள சிறுமியை ஒன்றை வருடமாக சீரழித்த காமுகன்.. பெற்றோர்களே விடுதியில் தங்கவைத்தால் கவனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உளியம்பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பார்வையற்றோர் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கருமத்தம்பட்டி பகுதியை சார்ந்த தம்பதியின் 11 வயது மகள், நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். 

சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியின் காரணமாக அவதியுற்று வந்துள்ளார். இதனையடுத்து பள்ளியின் பாதுகாலவர் மாணவியை அங்குள்ள தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று மாணவியுடைய பெற்றோர் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமியின் பெற்றோர்கள், சிறுமியிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதில், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அப்பகுதியை சார்ந்த பார்வைகுறைபாடு உடைய ஆசிரியரான உதயகுமார் (வயது 41) என்பவன் கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது. 

சிறுமி தனக்கு நடந்த கொடுமையை கண்ணீருடன் கூறவே, இதனைக்கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore child sexual abuse by teacher


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->