நைட்டியணிந்து வந்து பெண்களின் உள்ளாடையை திருடும் காமுகன்.. பதறும் கோவை..!!
in Coimbatore CCTV footage girl wear dress theft by sexual culprit
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களின் அநீதிகள் நாம் அறிந்த ஒன்றாகியுள்ளது. திருநாவுக்கரசு கும்பலால் அரங்கேறிய கூட்டுப்பாலியல் பலாத்காரம், துடியலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என பல குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில், கோயம்புத்தூர் துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில், பெண்களின் உள்ளாடை மற்றும் செருப்புகளை குறிவைத்து திருடி செல்லும் சைக்கோ திருடனை காவல் துறையினர் கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
துடியலூர் பகுதியில் இருக்கும் இல்லங்களில், பெண்களின் உள்ளாடை மற்றும் செருப்புகள் போன்றவை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருடு போயுள்ளது. துவக்கத்தில் ஒன்றிரண்டு துணியாக காணாமல் போயுள்ளதால் கண்டுகொள்ளாது விட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதியன்று இரவு உள்ளாடை திருட்டு போகும் விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருக்கும் இல்லத்தில் பெண்களின் உள்ளாடை மொத்தமாக காணாமல் போயுள்ளது.
இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு காமிராவை சோதனை செய்ததில், பெண்களை போல நைட்டியணிந்து வந்த மர்ம நபர், ஆட்கள் இல்லாத வீட்டின் பூட்டினை உடைத்து பெண்களின் உள்ளாடை மற்றும் செருப்புகளை குறிவைத்து திருடியுள்ளார்.
மேலும், இவர் வீட்டில் உள்ள பணமோ / பொருளோ திருடாத நிலையில், பெண்களின் ஆடைகளை மட்டும் குறிவைத்து திருடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த குற்றவாளியை விரைவில் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
in Coimbatore CCTV footage girl wear dress theft by sexual culprit