தலைக்கேறிய போதை.. தகராறு செய்த தம்பி.. கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்த சகோதரர்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியை சார்ந்தவர் செல்வகுமார் (வயது 45). இவரது சகோதரரின் பெயர் ராஜகோபால் (வயது 35). 

இவர்கள் இருவருக்குமே திருமணம் முடியாத நிலையில், இவர்கள் இருவரும் இவரது தாயார் குருவம்மாளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மது பழக்கத்திற்கு அடிமையான நபர்கள் ஆவார்கள். 

இந்த நிலையில், இருவரும் மது அருந்தும் பழக்கம் வைத்திருந்தாலும், ராஜகோபால் அதிகளவு மது அருந்திவிட்டு தினமும் வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று முன்தினமும் இதே போல் அதிகளவு மது அருந்தியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து வழக்கம்போல தகராறு செய்த நிலையில், இதனால் கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளான செல்வகுமார் ராஜகோபாலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore brother murder due to drinks fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->