பச்சிளம் குழந்தையின் தொடையில் ஊசி..! மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்..!! கோவையில் பேரதிர்ச்சி..!!
in Coimbatore baby leg insert needle injection parents shocked
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியை சார்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் சொந்தமாக அலைபேசி பழுதுநீக்கம் செய்யும் கடையினை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மலர்விழி (வயது 20). இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை உள்ள நிலையில்., மீண்டும் கர்ப்பமான மலர்விழி பிரசவத்திற்க்காக கடந்த மாதத்தின் 19 ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதியாகிய மலர்விழிக்கு 20 ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்த நிலையில்., தாயும் - சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சமயத்தில்., கடந்த 21 ஆம் தேதியன்று மாலை ஆறு மணியளவில் குழந்தைக்கு., நோய்எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் தொடை பகுதியில் தடுப்பூசி போடப்பட்டது.
இதற்கு பின்னர் கடந்த 31 ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இந்த தருணத்தில்., வீட்டிற்கு சென்றதில் இருந்து குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது. குழந்தையின் அழுகைக்கு காரணம் தெரியாத நிலையில். தவித்து வந்த தாயார் மற்றும் உறவினர்கள் பரிதவித்து இருந்துள்ளனர்.
இந்த நிலையில்., குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட கடந்த 21 ஆம் தேதியன்று லேசான வீக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் குறைந்துவிடும் என்று எண்ணியிருந்த நிலையில்., வீக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதனால் குழந்தையும் இடைவெளி இல்லாமல் அழுதுகொண்டு இருந்துள்ளது. இந்த சமயத்தில்., தாயும் - மலர்விழியின் தாயார் தேன்மொழியும் குழந்தையை குளிக்க வைத்துள்ளனர்.
குழந்தையை குளிக்க வைத்த போது., குழந்தையின் தொடை பகுதியில் எதோ குத்துவது போல இருந்துள்ளது. மேலும்., குத்தும் இடத்தில் இருந்து இரத்தம் வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியான மலர்விழி குழந்தையை சோதித்த சமயத்தில்., கூர்மையான ஊசி இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தெளிவாக பார்க்கையில் ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்துள்ளது.
பின்னர் இது குறித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தவே., உறவினர்கள் குழந்தையின் தொடையில் இருந்த ஊசியை அகற்றினர். இந்த சமயத்தில்., குழந்தை வலி தாங்க முடியாமல் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று., மருத்துவமனை அதிகாரியிடம் இது தொடர்பாக தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும்., அரசு மருத்துவமனை குறித்த பயத்தை அதிகரித்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Coimbatore baby leg insert needle injection parents shocked