பள்ளி மாணவிகளை ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்கள்.! கோவையில் அரங்கேறும் கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திரபுரம் பகுதியை சார்ந்த 14 வயதுடைய மாணவி., தினமும் பள்ளிக்கு அதே பகுதியை சார்ந்த மதியழகன் என்பவனின் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். 

இந்த சமயத்தில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பின்னர்., மாணவி தனது பெற்றோருடன் அங்குள்ள குனியமுத்தூர் பகுதியில் வீடு மாறி சென்றுள்ளனர். இந்த நிலையில்., மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மயமாகியுள்ளார். 

இவரை தேடி அலைந்த பெற்றோர்கள் இவரை காணாது தேடி அலைந்து பின்னர்., காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., ஆட்டோ ஓட்டுநர் மதியழகனின் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து., ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., காவல் துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 

ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் மதியழகனையும்., சிறுமியையும் மீட்ட காவல் துறையினர்., மாணவி தினமும் பள்ளிக்கு சென்று வரும் சமயத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி., காதல் என்ற நாடக காதல் வலையில் விழ வைத்து மயக்கிய நிலையில்., சிறுமியை சம்பவத்தன்று கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளான். இவனை கைது செய்த காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில்., ஈரோடு மாவட்டத்தை சார்ந்த 13 வயது சிறுமியை., ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவன்., தினமும் மாணவியை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் சமயத்தில்., ஒரு நாள் வலுக்கட்டாயமாக அவரை கடத்தி சென்று கற்பழித்துள்ளான். 

இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியதை அடுத்து., பதறிப்போன சிறுமி யாரிடமும் இது குறித்து கூறாமல் இருக்கவே., இதனை தருணமாக உபயோகம் செய்து அவ்வப்போது மாணவியை சீரழித்து வந்துள்ளான். 

இந்த நிலையில்., மாணவி கோடை விடுமுறையின் போது வீட்டில் இருந்த சமயத்தில்., வீட்டிற்கு சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்ததை அடுத்து., இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி விஷயமானது வெளிவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore auto driver kidnapped school girls and sexual harassment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->