நாட்டிலேயே இரண்டாவது பெரிய இரும்பு எக்கு ஆலையில் பயங்கர தீ விபத்து.! ஏழு பேர் பரிதாப பலி.!!
in China steel factory fire accident 7 peoples died
இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் அரங்கேறும் விபத்துகளில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில்., சீன நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
சீன நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள ஹபி மாகாணத்தில் இருக்கும் ஹண்டன் நகரில்., சீனாவின் இரண்டாவது இரும்பு எக்கு ஆலையானது அமைந்துள்ளது.
இந்த ஆலையில் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில்., இன்று வழக்கம்போல ஊழியர்கள் தங்களின் பணியை கவனித்துக்கொண்டு இருந்தனர். இந்த தருணத்தில்., ஆலையில் திடீரென தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கும் - மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in China steel factory fire accident 7 peoples died