செய்யாறு பேருந்தில் கொலை செய்யப்பட்ட நபர் விவகாரத்தில்., கைதான முக்கிய புள்ளிகள்.! தீவிரமாகும் விசாரணை.!!
in cheyyar murder investigation police arrest culprit
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் மடம் தெரு பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக செய்யாறு வேல் சோமசுந்தரம் நகரில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காலையில்., திருமண தடை நீங்குவதற்காக கோவிலுக்கு சென்று வழிபட்டு., செய்யாறு நகர் பகுதியில் இருக்கும் காஞ்சிபுரம் சாலையில் இருக்கும் திரையரங்கிற்கு முன்னதாக தேநீர் குடித்துக்கொண்டு இருந்தார்.
இந்த தருணத்தில்., அங்கு காரில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பலானது சதீஷை பயங்கரமாக தாக்கவே., அங்கு வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்தில் ஏறினார். இவரை விடாது துரத்திய கும்பலானது., சதீஷை இருக்கையில் வைத்தே கொலை செய்து., காரிலேயே தப்பி சென்றது.
இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில்., சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்து., அதில் பதிவாகியுள்ள காரின் எண்ணை அறிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தருணத்தில்., கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார்., காஞ்சிபுரம் பிரபல ரவுடியான ஸ்ரீதரின் கூட்டாளியாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். செய்யாறு - ஆற்காடு சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையின் போது., காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான தேவன் (வயது 24)., பத்மநாபன் (வயது 24)., சிகாமணி (வயது 25)., ரமேஷ் (வயது 24) மற்றும் நந்தகோபால் (வயது 24) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., கொலையான சதீஷ்குமார் மற்றும் நானும் ஸ்ரீதரின் கூட்டாளிகளாக இருந்து வந்தோம். ஸ்ரீதரின் இறப்பிற்கு பின்னர் இரண்டு கோஷ்டியாக நாங்கள் பிரிந்த நிலையில்., சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர். இதில் இருந்து நான் எப்படியோ தப்பித்துவிட்டேன்.
இதனைத்தொடர்ந்து சதீஷ் இருக்கும் பட்சத்தில் எனது உயிருக்கு என்றுநாளும் ஆபத்து ஏற்படலாம் என்ற எண்ணத்தில்., அவரை நாங்கள் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில்., அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்., மற்றொரு ரவுடி கும்பலை சார்ந்த மூவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விசாரணையை காவல் துறையினர் தொடர்ந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cheyyar murder investigation police arrest culprit