மனைவியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த வாலிபனை ஓடவிட்டு வெட்டிசாய்த்த கணவன்.!!
in chennai youngster killed due to illegal affair
சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்து வரும் நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடு வீதியில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்வலையை பதிவு செய்தது.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., கொலையான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுமட்டுமல்லாது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து விசாரணை செய்து வந்த நிலையில்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சார்ந்த ராஜேஷ் மற்றும் நாகமணி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., கொலையான தினேஷிற்கு அங்குள்ள சுமார் 40 வயதுடைய பெண்மணியுடன் பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளகாதலாக மாறியுள்ளது.
இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த தகவலனானது பெண்ணின் கணவருக்கு தெரியவரவே தினேஷை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதன் மூலம் தினேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
English Summary
in chennai youngster killed due to illegal affair