ரவுடியை கொலை செய்தது எதற்காக?.! கணவன் - மனைவி பகீர் வாக்குமூலம்.!!
in Chennai wife husband killed rowdy
தமிழகத்தில் சென்னையை அடுத்து கொரட்டூர் பாடியில் உள்ள கலைவாணர் நகர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவரது பெயரை அங்குள்ள பகுதியில் கிரைம் சுரேஷ் (வயது 30) என்றும் அழைப்பார்களாம்.
இவன் மீது அங்குள்ள பகுதியில் கொலை., கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்., கடந்த 14 அம தேதிக்கு மேலாக இவன் திடீரென மாயமாகவே., இவனை காணாது தேடியலைந்து தாயார்., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., இதே பகுதியை சார்ந்த ஜெயக்கொடி - கார்த்திகா என்ற தம்பதியினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முதலில் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்த நிலையில்., பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்த விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது.,
தம்பதிகளின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த கொடூரனை அடித்து நொறுக்கிய நிலையில் எதிர்பாராத விதமாக அவன் இறந்துள்ளான். இதனையடுத்து இவனின் உடலை ஆட்டோ மூலமாக பெரும்பாக்கம் பகுதிக்கு எடுத்து சென்று முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai wife husband killed rowdy