நல்ல மழை பெய்தாலும்., சில மாவட்டத்தில் குறைவுதான்..! சென்னை வானிலை ஆய்வு மையம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் பருவமழை பெய்யும் காலமாகும். பொதுவாக தமிழகத்திற்கு இயல்பாக பருவமழை சமயத்தில் 445.7 மிமீ பெய்ய வேண்டிய மழையானது., இவ்வருடத்தில் 453.5 மிமீ மழை பெய்துள்ளது. இந்த மழையளவு இயல்பை விட சுமார் இரண்டு விழுக்காடு அளவிற்கு அதிகமானதாகும். 

இது இயல்பான மழையளவு என்ற கணக்கில் எடுத்து கொண்டாலும்., சில மாவட்டத்தில் மட்டும் மழையளவு குறைவாக இருந்துள்ளது. தமிழகத்தின் நீலகிரி., இராமநாதபுரம்., திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் மழையானது பெய்துள்ளது. மேலும்., கோயம்புத்தூர்., புதுக்கோட்டை., சிவகங்கை., நாகப்பட்டினம் மற்றும் ஈரோடு மாவட்டத்திலும் இயல்பை விட அதிக மழை கிடைத்துள்ளது.

chennai,

மேலும்., சுமார் ஒரு விழுக்காடு அதிகளவு மழையாக கன்னியாகுமரி., காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இந்நிலையில்., பெரம்பலூர் மற்றும் வேலூர்., திருவண்ணாமலை., மதுரை., திருச்சி., தருமபுரி மாவட்டங்களில் மழை குறைவான அளவு பெய்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் சென்னையில் 16 விழுக்காடு அளவான மழை குறைவாக பெய்துள்ளது. இதனைப்போன்று திருவள்ளூர்., சேலம்., திண்டுக்கல்., தஞ்சாவூர் மாவட்டத்தில் குறைவான அளவு மழை பெய்துள்ளது.

இந்த நிலையில்., சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்., தமிழகத்தில் இருக்கும் 32 மாவட்டத்தில் மதுரை., பெரம்பலூர்., திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் குறைவான மழை பெய்துள்ளதாகவும்., தமிழகத்தின் 28 மாவட்டத்தில் இயல்பான மழையளவு பெய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai weather report announce rain is low for tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->