டியூஷன் என்ற பெயரில் அரங்கேறிய கொடூரம்..! விசாரணையில் பதறும் காவல் துறையினர்.!!
in Chennai tuition master sexual harassment police investigation going on
தமிழகத்தில் சென்னையில் உள்ள தி,நகர் பகுதியை சார்ந்தவர் சஞ்சனா (வயது 28). இவர் பட்டதாரியாக இருந்து வரும் நிலையில்., தனது இல்லத்திலேயே டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் 10 ஆம் வகுப்பு மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சஞ்சனா பாடம் எடுத்து வரும் நிலையில்., சஞ்சனாவுடன் சேர்ந்து அவளது நண்பன் பாலாஜி என்பவன்., டியூஷன் பயில வந்துள்ள மாணவ - மாணவியர்களை தனியறையில் வைத்து ஆபாச வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டு தப்பிய மாணவியொருவர்., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., இவர்களின் அலைபேசியில் மாணவ - மாணவியர்களின் ஆபாச படங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து பாலாஜி அளித்த வாக்குமூலத்தில் ஆபாச படங்களை வைத்து பணம் பறித்தும் தெரியவந்துள்ளது.
மேலும்., இவனிடம் பணம் தர இயலாத மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. சுமார் 10 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளை இருவரும் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai tuition master sexual harassment police investigation going on