போலி வேடம்.. பலே திருட்டு.. பலநாள் திருடன் அகப்பட்ட சோகம்.! காவல்நிலையத்தில் கதறல்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கே.கே நகர்., அசோக் நகர்., விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கோவில்களில் இருமுடி கட்டும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்ட ஒரு 47 வயதான ஆசாமி ஒருவர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். 

கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்தவர் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு அங்கிருக்கும்., முத்துமாரியப்பன் என்பவர் இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் அவர்களின் உடமைகளை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருப்பதை கண்டுள்ளார். 

thief, theft, thief gang,

இதனையடுத்து அங்கிருந்த கைப்பையை இலாகவமாக தூக்கி சம்பவ இடத்தில் இருந்து சென்ற நிலையில்., அந்த கைப்பையில் சுமார் ரூ.ஒரு இலட்சம் மதிப்புள்ள அலைபேசி இருந்துள்ளது. இதனையடுத்து செல்போன் காணாமல் போயுள்ளதை அறிந்த குடும்பத்தினர் அங்குள்ள பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர். 

பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., அங்கிருக்கும் கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்து., இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

police, police siren,

இந்த விசாரணையில் திருட்டு செயலில் ஈடுபட்ட செந்தில்குமார் என்பவரை நெசப்பாக்கம் அருகில் உள்ள கடையில் வைத்து கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில்., மேற்கு மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க நகைகளை திருடியது., நெசப்பாக்கத்தில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து உண்டியலை திருடியது., பாண்டி பஜாரில் செல்போன் திருட்டு போன்ற பல வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது. 

மேலும்., இவர் தன் மூன்றாவது மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் மதுரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதும்., திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு குடும்பத்தோடு அனைவரும் வந்திருக்கும் நேரத்தில்., இதனை பயன்படுத்தி திருடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளான். சுபகாரியங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai thief arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->