தாயாரின் கள்ளக்காதலை பல முறை கண்டித்தும் பலனில்லாததால்., மகனின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.!!
in chennai son killed her mother due to illegal affair
சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி மண்ணிவாக்கம் பகுதியில் இருக்கும் கக்கன் தெருவை சார்ந்தவர் அன்பு. இவரது மனைவியின் பெயர் பவானி (வயது 40). இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில்., இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில்., அன்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில்., பவானி அங்குள்ள படைப்பை பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., அவருடன் பணியாற்றி வரும் கட்டிட மேற்பார்வையாளரான ராஜ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் பவானியின் மூத்த மகனான சம்பத்துக்கு (வயது 22) தெரியவரவே., கள்ளக்காதல் தொடர்பை கைவிட கூறி பல முறை தாயாரை கண்டித்துள்ளார். இவரின் பேச்சுக்களை ஏற்காத பவானி., வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில்., நேற்றிரவு கள்ளக்காதலன் ராஜ்குமாருடன் பவானி மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மோட்டார் வாகனத்தில் இருவரையும் விரட்ட துவங்கிய நிலையில்., அதிவேகத்தில் சென்ற கள்ளக்காதல் ஜோடிகளின் வாகனம் வேகத்தடையில் பலமாக சென்றதை அது., இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர். இந்த சமயத்தில்., மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சம்பத் தனது தாயாரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி சென்று., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பவானியின் உடலை கைப்பற்றி., பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., சம்பத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in chennai son killed her mother due to illegal affair