ரவுடியை கொலை செய்த கணவன் - மனைவி.! காவல் துறையினரின் விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னையை அடுத்து கொரட்டூர்  பாடியில் உள்ள கலைவாணர் நகர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவரது பெயரை அங்குள்ள பகுதியில் கிரைம் சுரேஷ் (வயது 30) என்றும் அழைப்பார்களாம். இவன் மீது அங்குள்ள பகுதியில் கொலை., கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்., கடந்த 14 அம தேதிக்கு மேலாக இவன் திடீரென மாயமாகவே., இவனை காணாது தேடியலைந்து தாயார்., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., இதே பகுதியை சார்ந்த ஜெயக்கொடி - கார்த்திகா என்ற தம்பதியினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முதலில் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்த நிலையில்., பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்த விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது., 

தம்பதிகளின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த கொடூரனை அடித்து நொறுக்கிய நிலையில் எதிர்பாராத விதமாக அவன் இறந்துள்ளான். இதனையடுத்து இவனின் உடலை ஆட்டோ மூலமாக பெரும்பாக்கம் பகுதிக்கு எடுத்து சென்று முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இது குறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. 

died, murder, killed,

அந்த விசாரணையில்., சென்னை பாடியில் உள்ள கலைவாணர் நகர் பகுதியை சார்ந்தவர் ஜெயக்கொடி. இவர் சென்னை தி.நகரில் இருக்கும் நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வரும் நிலையில்., இவர் கார்த்திகா (வயது 28) என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில்., கார்த்திகா அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே டிபன் கடை நடத்தி வந்துள்ளார். 

இந்த கடையில் சாப்பிட வந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவனிற்கும் - கார்த்திகாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டதை அடுத்து., இருவரும் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில்., விபரீத எண்ணம் கொண்ட சுரேஷ் கார்த்திகாவை அடைய வேண்டும் என்ற நினைப்பில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். 

இந்த நிலையில்., கடந்த 14 ஆம் தேதியன்று தனது தோழியின் இல்லத்திற்கு சென்று கையை பிடித்து இழுத்த நிலையில்., இதனை கண்டு அதிர்ச்சியான ஜெயக்கொடி சுரேஷை தாக்கியதில் தலையில் காயமடைந்த நிலையில் மயக்கமடைந்துள்ளான். இதனையடுத்து சுரேஷின் உடலை ஜெயக்கொடியின் நண்பர்களுடன் சேர்த்து செங்குன்றம் பகுதிக்கு எடுத்து சென்று தலையை தனியாக அறுந்து கொலை செய்து., உடலை தனியாக போட்டுவிட்டு சென்றுள்ளார். 

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றிய நிலையில்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்., மகனை காணாது சுரேஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இந்த விஷயம் வெளிவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai rowdy killed by husband wife police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->