ரூ.60 இலட்சம் மோசடி செய்த கால் டாக்சி நிறுவனம்.. கண்ணீரில் நிற்கும் மக்கள்.!!
in Chennai peoples miss used by fraud taxi license
கால் டாக்சி நிறுவனத்தின் சார்பாக முகர்வர்கள் தேவை என்று விளம்பரம் செய்துவிட்டு., பல இலட்சம் ரூபாய் மோசடி செய்து., இதனால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஜே.டி.ஆர் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பாக சென்னையில் புதியதாக துவங்கவுள்ள ஐ டாக்சி நிறுவனத்திற்கு முகவர்கள் தேவை என்ற தகவலானது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
இதுதொடர்பான தகவலை நம்பிய மக்கள் முகவர் உரிமம் பெறுவதற்காக ஐ டாக்சி நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் ஏராளமான மக்கள் முன்பணமாக ரூ.60 இலட்சம் வரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில்., ஐ டாக்சி நிறுவனத்தை சார்ந்த உரிமையாளர்களான அசோகன் மற்றும் கண்மணி., கார்த்திக் ஆகியோர் சேர்ந்து முகவர் உரிமத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும்., தங்களின் பணத்தை எப்படியாவது திரும்பி பெற்றுத்தர கூறியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai peoples miss used by fraud taxi license