சீரழியும் தலைநகர்..! இணையதள விளம்பரம்., ஆறுக்கு ஆறு அறையில் உல்லாசம்..!! வெளியான பகீர் தகவல்..!!
in Chennai online prostitution is going on police investigate siviyarly
அழகான பெண்கள்., தலையினை மறைக்கும் வகையில் மனமனக்கும் வகையில் மல்லிகை பூ.. பார்ப்போருக்கு மல்லிகை பூவா? இல்லை மல்லிகை தோட்டமா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில்., சாலையோரத்தில் டார்ச்லைட் வைத்து விபச்சாரம் நடந்த காலங்கள் அது.. இன்றளவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விபச்சாரமும் இணையத்தளத்தில் புகுந்தது. இந்த விஷயம் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது தான் பெரும் அதிர்ச்சி என்றும் கூறலாம்.
சரியான மற்றும் குறிப்பிட்ட இணையத்தில் மட்டுமே விபச்சார விளம்பரங்கள் மற்றும் அதனை சேவைகள்., விபரங்கள் குறிப்பிடப்பட்டு., விலைக்கேற்ற பொருள் என்பதை போல விலையும்., அலைபேசி எண்களை உறுதி செய்யும் செயலும் அரங்கேறி வருகிறது. விளம்பரத்தில் உள்ள எண்களை தொடர்பு கொண்டால் பெண்ணொருவர் மறுமுனையில்., பெயர் மற்றும் எந்த இடம்? எந்த நேரம் என்பதை குறிப்பிட்டு அழைப்பை துண்டித்து விடுவார். சென்னையில் உள்ள வடபழனி., விருகம்பாக்கம்., வளசரவாக்கம்., ஆயிரம் விளக்கு., போரூர்., அம்பத்தூர் பகுதிகள் மற்றும் ஈ.சி.ஆர். பங்களா பகுதியில் இது நடைபெறுகிறது.
இது தொடர்பான விபச்சார விளம்பரங்கள் ஏ.சி.வசதி, நட்பான சேவைகள் என்பதில் துவங்கி., டிசைன் டிசைனாக கூறப்பட்டு உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.600 ல் துவங்கி., ரூ.10 ஆயிரம் வரையிலும் சேவைகள் உள்ளதாகவும்., விபச்சார தொழிலானது இவ்வாறான சேவையுடன் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக முன்னாள் விபச்சார தரகர்களிடம் கேட்ட சமயத்தில்., அவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போதுள்ள நிலையில்., வீதிகளுக்கு வீதி கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் இரவு கண்காணிப்பு காவல் துறையினர் என காவல் துறையினர் இருந்து வருகின்றனர். அன்றைய தினத்தை போன்று சாலைகளின் ஓரத்தில் நின்று தொழில் செய்ய முடியாது. இதனால் இணையத்தளம் மூலமாக பல வேலைகள் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர் தொடர்பு கொண்டவுடன்., அவரது அலைபேசி வாட்சப் எண்ணிற்கு புகைப்படங்கள் அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னர்., அவரை தனிமையான இடத்திற்கு வர சொல்லுவார்கள்.
பின்னர் அந்த நபர் காவல் துறையில் பணியாற்றி வருவாரா? இல்லை காவல் துறையினரால் அனுப்பப்பட்டு உள்ளாரா? என்பதை சோதித்து., எந்த விதமான பிரச்சனை இல்லை என்பதை அறிந்தவுடன் மற்றொரு இடத்திற்கு வர சொல்லுவோம்.. அந்த இடத்தில் இருவரும் உல்லாசமாக இருப்பார்கள். இப்போதுள்ள நிலையில் பணத்தை கைகளால் வாங்காமல் இருப்போம். காவல் துறையினர் பிடித்துவிட்டால் பணத்தையும் கூட ஆதாரமாக சமர்ப்பிப்பார்கள். இதனால் இப்போதுள்ள நிலைக்கேற்ப நாங்களும் மாறிவிட்டோம்.
இருவரும் தனிமையில் சந்திக்கும் அறைக்கு செல்லும் முன்னர் பணம் செலுத்துவிட்டு செல்வார்கள். காவல் துறையினரில் பெரும்பாலானோர் விபச்சாரத்தை எதிர்த்து., தொடர் பணிகள் செய்து வந்தாலும்., சில நபர்களின் உதவியுடன் இது நடைபெற்று வருகிறது. சில சமயம் காவல் துறையினர் சாதாரண ஆய்வு செய்வார்கள்., சில சமயம் இரகசிய கண்காணிப்பிற்கு பின்னர் ஆய்வு நடக்கும்., சில சமயத்தில் அதிரடியாக விபசார தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆய்விற்காக வருவார்கள். இவர்களின் வருகைக்கு முன்னரே விபச்சார தரகர்களுக்கு தகவல் வந்துவிடும்.
இதற்கு பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிடுவோம்., எதிர்பாராத சூழ்நிலையால் மாட்டிக்கொண்டோம் என்றால்., மூன்று மாதம் சிறைவாசம் தான். அதற்கு பின்னர் வந்து இதே தொழிலை தான் செய்வோம். இது ஒரு புறம் இருந்தாலும்., விபசார விளம்பரங்கள் ஆண்களின் கண்களை விட்டுவைப்பதில்லை. தினம் தோறும் ரூ.10 ஆயிரம் சம்பளம் மற்றும் வாடிக்கையாளர்., நிரந்தர வருமானம் என இளைஞர்களையும் விபச்சாரத்திற்கு இழுக்கும் சோகமும் இன்று இருக்கிறது.
இது போன்ற விளம்பர எண்களை தொடர்பு கொண்டால் ரூ.5 ஆயிரம் செலுத்தி உறுப்பினர் ஆன பின்னர்., தினமும் ரூ.10 ஆயிரத்திற்கு வாடிக்கையாளரை பிடித்து கொடுக்கிறோம் என்பார்கள்.. இதனை நம்பி ஏமாந்தவர்கள் தான் அதிகம். இது குறித்து விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர்., இணையதள விபச்சார விளம்பரங்கள் மற்றும் அது தொடர்பான இணையத்தை முடக்கியிருக்கிறோம். நாங்கள் என்னதான் செய்தாலும்., வெவ்வேறு பெயர்களில் இவர்கள் உலா வருகின்றனர்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கும் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். நாங்கள் என்னதான் செய்தாலும் மூன்றே மாதத்தில்., நாங்கள் கைது செய்த நபர்கள் அவர்களின் பணியை துவங்குகின்றனர். இது போன்ற குற்றத்தை குறைப்பதற்கு விபசாரத்திற்காக தனியான பகுதியை உருவாக்கி., இந்த தொழிலில் இருக்கும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும்... இவ்வாறு செய்தால் மட்டுமே விபச்சார குற்றங்களை குறைக்க இயலும் என்று தெரிவித்தனர். மேலும்., விபச்சாரிகள் தங்களுக்கு விருப்பப்பட்டு இந்த தொழிலும் செய்வதில்லை. சூழ்நிலை மற்றும் வாழ்வியலின் நிலையால் விபச்சாரத்திற்கு செல்லும் சோகமும் இருக்கிறது...
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai online prostitution is going on police investigate siviyarly