துரைப்பாக்கம் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in chennai murder case police investigation turning point
தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவரின் பெயர் முரளி. இவர் அங்குள்ள துரைப்பாக்கம் அருகேயுள்ள காரப்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இதே பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி கவுசல்யா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்., நேற்று துரைப்பாக்கம் பகுதியில் இருக்கும் தேநீர் கடையில் நண்பர்களுடன் முரளி தேநீர் அருந்திக்கொண்டு இருந்தார்.
இந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரொருவர் முரளியை கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு., சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதை அடுத்து., முரளியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முரளியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முரளி வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து., இது குறித்த தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில்., முரளி பணியாற்றி வந்த நிறுவனத்தில் பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையில்., அப்பெண்ணுடன் கொண்ட தொடர்பை துண்டித்து கவுசல்யாவை திருமணம் செய்து கொண்டதும்., அதே பெண்ணுடன் முரளி முறையற்ற உறவு வைத்திருந்தால்., பெண்ணின் கணவர் முரளியை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai murder case police investigation turning point