தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. மாமியாரை பதறவைத்த மருமகன்.. பதறிப்போன அக்கம்பக்கம்.!!
in chennai murder attempt wife mom police investigation
சென்னையில் உள்ள வியாசர்பாடி பி.வி.காலனி மூன்றாவது தெரு பகுதியை சார்ந்தவர் பாத்திமா (வயது 48). இவரது மகளின் பெயர் நிஷா. இவர் இதே பகுதியை சார்ந்த சீனிவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நிஷா, தனது தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மனைவியை சமாதானம் செய்யும் நோக்கில் சீனிவாசன் மாமியாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மாமியாரின் இல்லத்தில் வைத்து மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நேரத்தில், மாமியாருக்கும் - சீனிவாசனிற்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு வாக்குவாதமாக முற்றியுள்ளது. இதனால் கடுமையான ஆத்திரமடைந்த சீனிவாசன் சமயலறையில் இருந்த கத்தியால் மாமியாருடைய தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதனால் ஏற்பட்ட காயத்தால் மாமியார் அலறவே, இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அங்குள்ள ஸ்டாண்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai murder attempt wife mom police investigation