மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் விபரீத பயணம்.. துடிதுடிக்க இ.சி.ஆர் சாலையில் அரங்கேறிய சோகம்.!!
in Chennai motor cycle riders died in accident
தமிழகத்திலுள்ள சென்னை சோழிங்கநல்லூர் அடுத்துள்ள பெரும்பாக்கம் பகுதியை சார்ந்தவர் டில்லி (வயது 19). மோகனா (வயது 15). இவர்கள் இருவரும் நேற்று இரவு இவர்களின் நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்குள்ள மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று உள்ளனர்.
இந்த சமயத்தில்., அங்குள்ள பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோலை வாங்கி இவர்கள் நான்கு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். இந்த சமயத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரென இவர்களின் மீது மோதியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் வாகனத்தில் இருந்து டில்லி மற்றும் மோகனா உட்பட 4 பேரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு., சம்பவ இடத்திலேயே டெல்லி மற்றும் மோகனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் வந்திருந்த இரண்டு வாலிபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து., தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., படுகாயமடைந்த வாலிபரை சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களில் கேனில் பெட்ரோல் வாங்கியிருப்பது காரணமாக இவர்களின் மற்றொரு வாகனம்., வழியில் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக டெம்போ வேன் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai motor cycle riders died in accident