குழந்தைகளை உறங்க வைக்க மனைவி - கணவரின் தங்கைக்குள் சண்டை.. பச்சிளம் குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


ஆவடியில் குழந்தைகளை யாருடன் உறங்கவைப்பது என்பது தொடர்பான தகராறில், விரக்தியடைந்து 3 மாத கைக்குழந்தை மற்றும் 3 வயதாகும் மகனுடன் பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சார்ந்தவர் முத்துமாரி. இவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவசர ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் விஜயலட்சுமி. 

இவர்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய மகன் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமான விஜயலட்சுமிக்கு தற்போது 3 மாத கைக்குழந்தை உள்ளது. 

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், குழந்தைகளை யாருடன் உறங்க வைப்பது என்பது தொடர்ப்பினா சண்டையானது முத்துமாரியின் தங்கை மற்றும் விஜயலட்சுமி இடையே நடைபெற்றுள்ளது. 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இரண்டு குழந்தையுடன் விஜயலட்சுமி வீட்டினை விட்டு வெளியேறவே, இவரை காணாது தேடியலைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பான புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழ்நிலையில், இவர்கள் அங்குள்ள இந்துக்கல்லூரி இரயில் நிலையத்திற்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai mother suicide attempt with child due to family problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->