கஞ்சா அடித்து அபிஷேகம்.. போதையில் அட்டூழியம்... கொலையாளியாக மாறிய பூசாரியின் பகீர் வாக்குமூலம்.!!
in chennai man killed police investigation going on
தமிழகத்தின் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் அருகேயுள்ள இராஜாமங்கலம் பகுதியை சார்ந்தவர் ஜானகி இராமன் (வயது 50). இவர் ஐ.சி.எப்-ல் பிட்டராக பணியாற்றி வரும் நிலையில்., அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தீபஒளித் திருநாள் இரவில் சுமார் 10 மணி சமயத்தில்., அங்குள்ள பெரவள்ளூர் பகுதியில் தனது தோழருடன் வந்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்., இவர்களை வழிமறித்த கும்பலொன்று இருவரும் வெட்டி சாய்த்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில்., ஜானகி ராமன் இதே பகுதியில் இருக்கும் ஸ்ரீதேவி இளங்காளியம்மன் கோவிலில் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில்., தீபஒளித் திருநாளில் நடைபெற்ற சிறப்பு பூஜையன்று கோவில் பூசாரி ஓம் பிரகாஷ் (வயது 23) என்ற நபர் கஞ்சா போதையுடன் கோவிலுக்குள் வந்து பூஜை செய்த நிலயில்., இதனை ஜானகி ராமன் கண்டித்து வெளியேற்றியுள்ளார்.
மேலும்., கோவில் நிர்வாகத்தை ஓம் பிரகாஷின் குடும்பத்தினர் கவனித்து வந்த நிலையில்., கோவில் அறநிலையத்துறையின் கீழ் வருவதற்கு ஜானகிராமன் உதவியதால் முன்பகையில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருந்த பகை மற்றும் தற்போதையை பிரச்சனையை கருத்தில் கொண்டு தனது நண்பர்களுடன் கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai man killed police investigation going on